பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

111



‘அந்நிய ஆட்சிமீது ஆத்திரத்தை வளர்த்து விட்டால் மட்டும் தேசிய உணர்வு உறுதி பெற்று விடாது என்றார். ஆக்கவேலைகளைச் செய்து அதைக் காத்து வளர்க்க வேண்டும் என்பதைப் பாரதியார் தெளிவாக மக்கட்கு எழுதி விளக்கினார். கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி, நாட்டத்தில் கொள்ளாதவர்களைத் தனது பாடல் அடிகளாலேயே கேலி செய்தார். அவர்களைப் பற்றிப் பரிதாபப் பட்டார் பாரதியார்’ என்று திரவியம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது ‘தேசியம் வளர்த்த தமிழ்’ என்ற நூலில் பாரதியார் நாட்டுப் பற்றைப் பற்றி பெருமையோடு எழுதுகிறார்.

இத்தகைய ஓர் உணர்ச்சியின் அக்கினிக் குண்டமாக இருந்த பாரதியார், ஏன் ‘சுதேசமித்திரன்’ தின ஏட்டை விட்டு விலகினார்? இதுவும் ஒரு வினா தானே!

இந்தியத் தேசியக் காங்கிரஸ் இயக்கம் 1885-ஆம் ஆண்டு துவங்கியது முதல்; அண்ணல் காந்தியடிகள் அந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திய 1920- ஆம் ஆண்டு வரையில் ஆண்டாண்டுதோறும் இந்திய முக்கிய நகரங்களில் கூடிக் கலந்துரையாடி, இந்தியர்கள் வேண்டுதல் மனுக்களை ஆட்சியாளர்களுக்கு அனுப்பிடத் திரட்டி, விருந்துண்டு, மிதவாத பேச்சுக்களை அவரவர் நேரத்துக்குள் மேடை ஏறிப்பேசி, இறுதியாக இங்கிலாந்து மன்னருக்கு வாழ்த்துக் கூறும் வகையில் God Save the King என்ற பாடலைச் சேர்ந்திசைப் பாடிப் பேரவையை முடித்துவிட்டு அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுப் போய் விடுவதைப் போல, சென்னையிலும், அதே தேசிய இயக்கம் சில வழக்குரைஞர்களின் வாசல் காவலாளியாக இருந்தது. காரணம், அவர்கள் வழக்குச் சொல்லிகள் அல்லவா? அதனால், சட்டப்படி நடந்து கொள்வார்கள்; White Scholarகளைப் போல, Easy Chair Politiciansகளைப் போல, மேனாமினுக்கிகளாக, ஆடைகளில் அழுக்குப்படாமல், மிதவாதிகளாக, அரசியல் செய்தார்கள். சென்னையிலும் காங்கிரஸ் இயக்கத்தின் நிலை இதுதான்.

1907-ஆம் ஆண்டில் நடைபெற்ற சூரத் காங்கிரஸ் பேரவையின் கூட்டத்தில் மிதவாதியான கோபாலகிருஷ்ண-