பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

நேருக்கு நேர் சந்திக்கும் கலை!



உடனே அறிஞர் அண்ணா அவர்கள் தனது ‘திராவிட நாடு’ பத்திரிகையில் ‘எரியிட்டார் : என் செய்தீர்? என்று கேட்டு பதில் எழுதினார்.

இதுதான் அன்றைய கால கட்டத்தின் அன்றாட நடப்பினை அறியும் நேருக்கு நேர் சந்தித்துக் கேட்ட பேட்டிக் கலை. அதற்கு அடிகள் தனது அனுபவத்தை, அறிவை மக்களுக்கு விளக்கிக் காட்டிய பேட்டி காட்சியாக அமைந்தது. இந்தப் பேட்டி ஒரு வரலாற்றுச் சம்பவ ஆன்மிகத் தெளிவைத் தெரிவித்த பேட்டியாகும்.

நிகழ்ச்சியின் விவரங்களை
வெளிப்படுத்தும் பேட்டி

தந்தை பெரியார் சேலம் நகரில் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போரட்டத்தை நடத்தினார்! இந்த சிலை உடைப்புப் போராட்டத்தால் வன்முறைகள் ஏதும் நடைபெறவில்லை; அமைதியாக மண் சிலைகளை நடுரோடில் போட்டு உடைத்தார்! தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டம் ஆன்மிக உலகில் ஒருவித பரபரப்பை உருவாக்கியது.

உடனே செய்தியாளர் ஒருவர் சேலத்தில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் முடிந்த பிறகு பேச வந்த அண்ணா அவர்களிடம் மேடையில் பேசுவதற்கு முன்பே, ‘பெரியார் பிள்ளையார் சிலைகள் உடைப்புப் போராட்டம் நடத்தினாரே, அதனை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று பேட்டி கண்டு கேட்டனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் அதற்குப் பதில் கூறும் போது, ‘போராட்டங்களைத் தேடியும் போக மாட்டேன். போராடும் கட்டம் வந்தால் நடத்தாமலும் இருக்க மாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன், சிலைகளையும் உடைக்க மாட்டேன்’ என்றார்.

செய்தியாளர்களின் இந்தப் பேட்டி, அண்ணா அவர்களைச் செய்தியாளர் நேருக்கு நேர் சந்தித்தக் கலைக்காட்சி, அக்கால கட்டத்தில் நடைபெற்ற பகிரங்க நிகழ்ச்சியின் விவரங்களை வெளி கொணர்ந்து அதன் உட்பொருளை மக்களுக்குப் புலப்படுத்திய சாட்சி.