பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைச் சுருக்கம்

இயற்பெயர்: அ.நா.வாசுதேவன்
புனைப்பெயர்:என்.வி. கலைமணி
சொந்த ஊர்:வடார்க்காடு மாவட்டம்,
வந்தவாசி வட்டம், அமுடுர் சிற்றூர்.
பிறப்பு: 30 திசம்பர் 1932ஆம் ஆண்டு
தந்தை பெயர்: அ.கு.நாராயணசாமி, காவல்துறை (ஓய்வு)
வாழ்க்கை துணைநலம் புலவர்.T. உமாதேவி பிலிட்,
ஆதம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, பெண்பாற் புலவர்
மக்கட்பேறுகள்: வா. மலர்விழி, வா. அறிஞர் அண்ணா,
வா.பொற்கொடி, வா. திருக்குறளார்
பெயரர்கள்: க. கணேஷ் கார்த்திக், க. அனிதா
வே.மகேஷ்,வே.ஜனனி
பணி:1950ஆம் ஆண்டு முதல்
2005 ஆம் ஆண்டு இன்றுவரை பத்திரிகையாளர்
கல்வி புலவர்,எம்.ஏ (வரலாறு)
சாதனைகள்: அரசியல், வரலாறு, அறிவியல், இலக்கியம்,தமிழாய்வு,
நாடகம் சம்பந்தப்பட்ட 127 நூல்கள் எழுதியவை “சாம்ராட் அசோகன்”
வரலாற்று நாடகம் 30 நகர்களில் நடிகர் ஹெரான் இராமசாமி நடித்திட கதை
வசனம் எழுதியது: “இலட்சியராணி” என்ற நாடகம் கலைவாணர் NSK
தலைமையில் சென்னை, ஒற்றைவாடை கலையரங்கில் 6.4.1952 அன்றும்,
விழுப்புரம் நகரில் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில்
திருக்குறளார் வீ. முனிசாமி எம்.பி., அவர்கள் 1952, சனவரி மாதம் 29,30
ஆகிய இரு நாட்கள் நடத்தியது. 1952ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் துறை,
அஞ்சல் துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம் சென்னை வந்தபோது ஐ.என்.ஏ திடல்
என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய காங்கிரஸ் தலைமை அலுவலகத்
திடலுக்குள் தன்னந்தனியாக நின்று கருப்புக்கொடியை அவரிடம் கொடுத்து
கைதாகி 2 வாரம் சிறை சென்றது. மற்றும் பல சாதனைகள் உண்டு.
விரிவஞ்சி நிறுத்துகிறோம்.
அன்பன்
புலவர். என். வி. கலைமணி.எம்.ஏ.,