பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இணையற்ற வீரன் இவைகளுக்கெல்லாம் அடையாளமாக இப்போது எமது ஆர்ய சிகாமணியாகிய சித்ரபானுவைக் காத வித்தீர். உங்களுடைய சேர்க்கையானது சாமான்ய மானதன்று. இச் சேர்க்கையால் இந்த உலகமே நன்னிலையை அடையப் போகின்றது. ஆயினும், மருகரே ! ஒரு விஷயம் மாத்திரம் உம்மைக்கேட்டுக் கொள்ளுகிறேன். நீர் சித்ரபானுவைக் கலியாணம் செய்துகொண்ட விஷயம் எவருக்கும் தெரியா திருக்கவேண்டும். விஷயம் வெளிவருமாயின் அத னால் உமக்குக் கேடுகள் சம்பவிக்கும். உமக்கு உமது தந்தை இந்த ராஜ்யத்தைப் பட்டாபிஷேகம் செய்யமாட்டார். அதனால் எங்கள் பெண்ணுக்கும் குறைவு ஏற்படும். ப்ரகலாதன்:-மாமா! நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண் டாம்! உங்கள் பெண்ணும் எனது உயிருமான இந்தச் சித்ரபானுவுக்கு ஒரு குறை ஏற்படும் பக்ஷத் தில் என் உயிர் நில்லாது! கம்புங்கள்! கஜகேது:- அதென்ன! உமது தந்தையால் எனது பெண்ணுக்கு எதாவது குறையேற்பட்டால், நீர் உமது உயிரையா மாய்த்துக் கொள்வீர்? அந்தோ! மருகரே! இப்போதே எமக்குச் சித்தம் கலக்குகின் நதே! அந்தோ! மகளே! நீ என்ன காரியம் செய்து விட்டாய்! கேட்டாயா உனது அருமைக் காதலச் சொல்வதை? சித்ரபானு:- காதா ! இது என்ன ஆண்மையற்ற வார்த்தை! கஜ்கேது:- உ.மக்கு எதிராக உமது தந்தை ஏதேனும் செய்வாரானால் உயிரை மாய்த்துக்கொள்வதா?