பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

ஒரு துளிகூட உண்ணமாட் டாமல்
கொரகொர கொழகொழ கொணகொண என்றான்
இதன்மொழி பெயர்ப் பென்ன என்றால்
"எயிறு வீங்கி இடத்தை மறித்தது
தின்பதற் கென்ன செய்வேன்" என்பதாம்


பையனால் இப்படிப் பகர முடிந்தது
தலைவரால் அப்படிச் சாற்ற முடிந்தது
பிட்டை வாயில் இட்டுத் திணிக்கும்
தாயை நோக்கி அத் தடுக்குக் குழந்தை
"தாயே எனக்கிது சாகும்நேரம்" என்று
வாயால் சொல்லும் வல்லமை இல்லை
அறிவெனும் வெளிச்சம் அங்கே இல்லை
மடமை மட்டும் மகிழ்ந்து கிடந்தது.

10