பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-கூ0) இறையனார் அகப்பொருள் 145 காப்புச் சிறைமிக்க கையறு கிளவி 'காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும்' என்பது, காப்புச் சிறைமிகவினாற் கையற்றுச் சொல்லுஞ்சொல். காப்புத்தான் இருவகைய, நிறைகாவல் சிறைகாவல் என ; அவற்றுள், நிறை காவல் என்பது நிறையின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகா மைக் காப்பாட்கு ஆகாது முறையின் வேட்கை பெருகக் காண லுறவினான் ஆற்றாளாய்ச் சொல்லும் ; அதற்குச் செய்யுள் : ‘மின்கண் படாவடி வேல்நெடு மாறன் விண் டார்முனைமேல் மன்கண் படாத மயங்கிருள் நாள் வந்த நீர்த்துறைவற்கு என்கண் படாத நிலைமைசொல் லா திளஞ் சேவல் தழீஇத் தன்கண் படாநின்ற அன்னத்த தேயால் தகவின்மையே.' (உகச ) ' புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்பேனபோல் துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால் இன்கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் வன்கண்ணார் கானல் வரக்கண் டறிதியோ.' (சிலப். கானல்-கூ.) எனக் கொள்க. சிறைகாவல் என்பது, தாய்துஞ்சாமை, நாய்துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர்கடுகுதல், நிலவுவெளிப்படுதல், கூகை குழறல், கோழிகுரற்காட்டல் என இவை. அவற்றுள், தாய் துஞ்சாமைக்குச் செய்யுள் : 'ஆயுந் தமிழ்மன்னன் செங்கோல் அரிகே சரிமுனைபோல் தேயும் நினைவொடு துஞ்சாள் மடந்தையிச் சேயிழையாள் தாயும் துயில்மறந் தாள் இன்ன நாள் தனித் தாள்செடுந்தேர்க் காயும் கதிரோன் மலைபோய் மறைந்த கனையிருளே.' (உககு) இனி, நாய் துஞ்சாமைக்குச் செய்யுள் : 'வாருந்து பைங்கழற் செங்கோல் வரோதயன் வஞ்சியன்னாள் சேரும் திறமென்னை தேன் தண் சிலம்பனைத் திங்கள் கல்சேர்ந்து ஊரும் துயின்றிடம் காவல ரோடன்னை உள்ளுறுத்தெல் லாருந் துயிலினும் துஞ்சா ஞமலி அரையிருளே.' (உக்சு) இனி, ஊர் துஞ்சாமைக்குச் செய்யுள் : ' மாவும் களிறும் மணிநெடுந் தேரும்வல் லத்துப்புல்லாக் கோவும் துமியவை வேல்கொண்ட கோன் அந்தண் கூடலன்ன பூவும் புகையும் விரையும் கமழ்ந்து பொன் னாருலகம் மேவும் விழவொடு துஞ்சா திரவிவ் வியன்நகரே.' (உ.எ) இ. அ.-10