பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



--- 168 இறையனார் அகப்பொருள் (கற்பு 'கடிக்கண்ணி வேந்தரை யாற்றுக் குடிக்கன்னி வாகை கொண்டே முடிக்கண்ணி யாவைத்த மும்மதில் வேந்தன் முசிறியன்ன வடிக்கண்ணி வாட வளமணி மாளிகைச் சூளிகைமேல் (களே ..' கொடிக்கண்ணி தாம்வண்ணம் கண்ணிவந் தார்த்தன கொண்டல் இதுவும் மேலவற்றோடு ஒக்கும். இனி, முகில் நோக்கிச் சொல்லுவானாய்த் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியதற்குச் செய்யுள் : முகிலொடு கூறல் 'பண்தேர் சிறைவண் டறைபொழிற் பாழிப்பற்றாவரசர் புண்தேர் குருதி படியச்செற் றான்புனல் நாடனையாள் கண்டே ரழிந்து கலங்கும் அவள் தன் கடிநகர்க்கென் திண்தேர் செலவன்றி முன் செல்லல் வாழி செழுமுகிலே.' (உடுக) இது கேட்ட தேர்ப்பாகன் விரைந்து தேர் கடாவுவானாவது பயன். வேந்தர்க்குற்றுழிப் பிரிந்து வினைமுற்றிப் புகுந்த தலை மகனது வரவுளர்ந்து தோழி தலைமகட்குச் சொல்லுமதற்குச் செய்யுள் : வரவெடுத்துரைத்தல் 'கொற்றாங் கயில்மன்னன் கோனெடு மா றன்தென் கூடலன்ன முற்ற இளமுலை மாதே பொலிகநம் முன்கடைவாய்ச் செற்றார் பணி திறை கொண்டரும் அன்பர் செழுமணித்தேர்ப் பொற்றார்ப் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே.' (உசு 0 ) 'ஆரும் அணியிளம் போந்தையும் வேம்பும் அலர்ந்து தண்தேன் வாரும் கமழ்கண்ணி வானவன் மாறன் தன் மாந்தை அன்னாய் காரும் கலந்து முழங்கிமின் வீசின்று காதலர் தம் ' தேரும் சிலம்பிப் புகுந்தது நங்கள் செழுநகர்க்கே ' (உசுக) இனித், தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி, வினைமுற்றி மீள்வார் சொல்லிய பருவம் தூதாகி வந்தது என்னும்; அதற்குச் செய்யுள் : பருவத்தது பங்கியகர்தல் ' முன் தான் முகிழ்முலை ஆர முயங்கி முறுவல்உண்டு சென்றார் வரவிற்குத் தூதாய் எழுந்தது தென்புலிப்பை வென்றான் விசாரிதன் வேல்நெடு மாறன் வியன் முடிமேல் நின்றான் மணிகண்டம் போல் இருள் கூர்கின்ற நீள்முகிலே.' (உசு உ) (பாடம்) 1. வென்றா னழிய நறையாற் றகத்து வென் றான் முடிமேல்.