இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்தாதியில் சுந்தரர்
21
பாலித்தார், கூனன் கூன் நிமிரப் பெற்றான்; குருடன் கண் பெற்றான். இதனைத் திருத்தொண்டர் திருவந்தாதி (48) பின்வருமாறு கூறும் :-
கூற்றுக் கெவனோ புகல்? திருவாரூரன் பொன்முடிமேல் ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதரும்அக் கோல்தொத்து கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற் சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே. [றமை
இச்செய்தி திருத்தொண்டர் புராணம்-கூற்றுவ நாயனார் புராணத்து இறுதிச் செய்யுளில் சேக்கிழார் சுவாமிகளாலும் அருளப் பெற்றுள்ளது. அது வருமாறு:-
தேனும் குழலும் பிழைத்ததிரு னொழியாள் புலவி தீர்க்கமதி தானும் பணியும் பகைதீர்க்குஞ் சடையார் துாது தருந்திருநாள் கூனும் குருடுந் தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப்பாதம் யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்குகூன்.