________________
சைத்தற்குரிய கருவிகள் அப்போழ்தே கிடைக்கவில்லை என்பது நன்கு புலப்படுகின்றது. இனி, அந்நாளில் பாண்டிய நாட்டில் அரசு செலுத் தியவன் வரகுணபாண்டியன் என்று தெரிவித்தவர், திரு விளையாடற் புராணத்தின் ஆசிரியராகிய பரஞ்சோதி முனிவர் ஆவர். அவர் கூறுவது மன்றலத் தெரியல் மார்பன் வாருனான் செங்கோல் ஓச்சிப் பொன்றலங் காவலாளிற் பொலிவுதாள் ஏம தாதன் என்ருெரு விறல்யாழ்ப் பாணன் வடபுலத் திருந்தும் போந்து வென்றிகொள் விருதினோடும் விஞ்சைசூழ் மதுரை சார்ந்தாள். என்பது. [திருவிளை, விறகுவிற்ற, 2.) பரஞ்சோதிமுனிவர் சேக்கிழாசடிகட்குப் பல நூற் நண்டுகட்குப் பின்னர் இருந்தவர். சி. பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நம் சேக் கிழரர் பெருமான் அறிந்துகொள்ள முடியா மலிருந்த செய்திகளை மிக அண்மைக் காலத்தில் நிலவிய பரஞ் சோதிமுனிவர் எங்களம் அறவல்லராயினரோ அறியேம். இங்ஙனம் இம்முனிவர் கூறும் செய்திகள் பலவும், வர லாற்றுண்மைக்கு முரண்பட்டிருத்தயை ஆராய்ச்சியாளர் பலரும் நன்குணர்வர். இனி, திருஞானசம்பந்தரால் வெப்புதோயினின்று காப்பாற்றப்பட்டவன், கூன்பாண்டியன் என வழங்கும் சுந்தரபாண்டியன் ஆவன் என்று பரஞ்சோதிமுனிவர்