உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(17)

செங்கை மாவட்டத்தில் சமூகத்தில் இருந்து ஒதுக்கி யவர்களுக்காக ஒரு ஒதுங்கிய பகுதியில் கட்டப்பட்ட இல்லம். மரமும் செடியும் மைனாவும் கிளியும் மண்டிக் கிடந்த மலைப்பகுதி. உலகை விட்டு ஒதுங்கியதுபோல் தோன்றிய அந்தப் பெரிய கட்டிடத்திற்குள்தான் உலகத்தின் தலைவிதியே நிர்ணயிக்கப்படுகிறது என்ற பிரமையை ஏற்படுத்தும். ஒரு தார்மீக ஒளி அங்கிருந்த ஒவ்வொரு மரத்திலும், மரக்கிளைகளிலும், புல்லிலும், பூவிலும் உள்ளொளியாய் ஓங்கிக் கொண்டிருந்ததுபோல் தோன்றியது.

கட்டிடத்தின் வராந்தாவின் முனையில் ஒரு வரவேற்பு அறை. தொழுநோயாளிகளைத் தொழுது இறுதியில் ஒரு தொழுநோயாளியாகவே மரித்து இன்று எல்லோரும் தொழும் உள்ளொளியான டாக்டர் ஆல்பர்ட் ஸ்விச்சரின் படம் பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தது. அருகில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் படம். அந்த மனிதாபிமானக் காவலர்களுக்கு நேர் கீழே இருந்த நாற்காலியில் அந்த மாது கண்ணாடி போடாமலே ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மணிமேகலை அம்மூதாட்டிக்கு பார்க்க முடியாத இடங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.

இந்த மூதாட்டியின் பெயர். பெயர் எதுக்கு? அவரே பெயரைப் பற்றிக் கவலைப்படாத போது? வேண்டுமானால் மனிதாபிமானி என்று சொல்லிக் கொள்ளலாம். இந்த அம்மையார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு,