பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 ★ இல்லம்தோறும் இதயங்கள்


 "எஸ் மதர்!”

மணிமேகலைக்கு மனதார நிம்மதி ஏற்பட்டது. பேரானந்தப் பெருவாழ்வு கிட்டியதுபோல் வந்தது. உலகமக்கள் ஒவ்வொருவரும் நம் உடம்பின் உறுப்புக்களில் ஒன்று என்றும், நாம் அந்த உலக மக்களின் உறுப்புக்களில் ஒன்று என்றும் இரண்டறக் கூட அல்ல, 'ஒன்றர' கலக்கும்போதும், நினைக்கும்போதும் ஏற்படும் பரமானந்தத்திற்கு இணை ஏது? ஈடேது?

என்றாலும் அவளுக்கு மகனின் நினைவு வராமல் இல்லை. அப்பாவின் ஞாபகம் போகவில்லை. அவ்வளவு ஏன்? மாமனாரின் நினைவோடு மிஸ்டர் ஜெயராஜின்மீது கூட நினைவு வந்தது. அவ்வப்போது வெங்கடேசனும், 'கூத்து கோவிந்தனும் வந்து அவளுக்கு ஆறுதல் கூறுவார்கள். சில சமயம் தங்களின் பிரச்னைகளுக்கு ஆறுதல் தேடியும் அவர்கள் வந்தார்கள். 'கூத்து கோவிந்தன் அங்கே கூத்து போடப் போவதாக வாக்களித்திருக்கிறான்.

ஒருநாள் மணிமேகலை மேஜை நாற்காலிகளை மதுராந்தகத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடைக்கு வண்டியில் அனுப்பிவிட்டு வண்டிக்காரருக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டு கைகளைத் துடைத்துக் கொண்டிருந்தபோது ரத்தினம் வந்தான். இப்போது பனியனுக்கு மேலே சட்டை போட்டிருந்தான்.

"வா அண்ணே! இவ்வளவு நாளும் ஏன் வரல? மெட்ராஸ்ல எதுவும் வேலையா?”

"மெட்ராஸ்ல வேலை இருந்து அங்க வந்தால்தான் இங்க வரணுமா? நிஜமாச் சொல்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாலக்கூட மெட்ராஸ் வந்திருந்தேன். ஆனால் இங்க வரல. ஏன் தெரியுமா? ஏதோ ஒரு காரியத்துக்கு போற இடத்துல இருக்கிற கோவிலுக்கு போறது புண்ணியமில்லியாம். அந்த கோவிலுக்குன்னே