பக்கம்:உயிரில் கலந்தது.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


கேளிக்கையினுாடே நிமிஷங்களையும விடிைகளையும் கூட்டுப் புள்ளி விடாமல் உண்ட மயக்கத்தில் சுவர்க் கடிகாரம் ‘ஹாயாக கடமை இயற்ற, அந்தக் கடமையின் பிரதிபலிப்

பாக, அதோ, பையன் வந்துவிட்டான்! - . -

‘இன்றைக்குக் கட்டாயம் வாணி-என் வாணி பதில் எழுதியிருப்பாள்’ என்னும் திடசித்தத்தோடு, இறைந்து கிடந்த தபால்களில் கண் ஒட்டம் பதித்தபோது, தனிப் பார்வைக்கு-அவரம் என்ற சிவப்பு மைக் கோட்டுடன் அவரது ஆவலுக்குப்பச்சைக்கொடி வீசியவாறு காட்சியளித்த அந்தக் கவரைப் பிரித்த போது, சிரிக்கின்ற வரம் வேண்டி வாணிக்குத் தூது அனுப்பி, அந்தத் துர்துடன் தன்னுடைய தீர்க்கமான சங்கற்பத்தையும் தூது விடுத்திருந்த மனவோர் மையின் பவித்திரத் தன்மையின் பாந்தவ்யத்தையும் அவர் விழித்தளத்தின் அடிவாரத்தில் தேக்கி வைத்துத் தரிசித்து மனத்தெம்பு பெறவும் தவறினரில்லை!

நாற்பது பக்க நோட்டுத்தாளில் எழுதப்பட்டிருந்தது. கடிதம்,

அதைக் கைப்பற்றியபோது, வாணியையே கைப்பற்றி யதாக ஒரு திளைப்பு ஊறியது. தெய்வத்தை எண்ணமிட்டார். “ஆண்டவனே! நீ சகலமும் புரித்தவன். ஆனால் இந்த மனிதர் கள்தாம் ஒன்றும் புரியாமல் குழம்பித் தவிக்கிறார்கள்!” என்னும் கீதாஞ்சலியின் வாசகம் அவரையும் அறியாமல் நெஞ்சில் முட்டிமோதி எதிரொலி கிளப்பிற்று.

“...பேரன்புக்குடைய தங்களை எப்படி விளிப்பது என்கிற ரகசியம் புரியாது விழிக்கிறேன். தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. உங்களது தபால் வந்தது. என் பாக்கியமே பாக்கியம் சித்திரை. வைகாசியில் கலியாணம் முடித்துவிடலாமென்பது தங்களது அம்மாவின் ஆசை. என் அப்பாவுக்கு.