பக்கம்:எனது பூங்கா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8

 மேற் குறித்த நலன்களோடு இந்நூலில் அங்கங்கே இலக்கியச் சுவை பரிமளிப்பதையும் வாசகர்கள் நுகர்ந்து இன்புறுவார்கள். குறள் முதலிய பெரு நூல்கள் அவற்றை எடுத்தாளும் நூல்களுக்கு ஒரு தனிச் சுவையையும் பெரு மையையும் நல்குகின்றன. இவை வாசகர்களுடைய மனத்தை வசீகரித்து அவர்களது இன்பத்தைப் பெருக்கு கின்றன. வசனம் எழுதுவோருள் ஒரு சிலர் தங்கள் நூலில் அடிக்கடி பழஞ் செய்யுட்களை உரைநடையில் அமைத்து, கருத்துக்கள் இடையறவு படும்படி செய்தும், தங்கள் நடைக்கும் பழஞ் செய்யுள் நடைக்குமுள்ள வேறுபாட்டினை நீக்க முடியாது தங்கள் ஏழ்மையைக் காட்டித் துன்புறுத்தியும் வருகின்றனர். இங்ஙணம் செய் தால் தங்கள் நூலுக்கு ஒரு குறை என்பதையும், பண்டைப் புலவர்களுக்கு அபராதம் செய்வதாகுமென்பதையும், அவர்கள் உணர்வதில்லை. இக்குறைகள் யாதுமில்லாதபடி, இலக்கியச் சுவை கமழும்படி எழுதப்பட்ட இக்கட்டுரை கள் வாசகர்களுக்குப் பெருவிருந்தா யமையும் என்பதில் ஐயமில்லை.
 இக்கட்டுரைகளுக்குரிய விஷயங்களும் நமது தற்கால வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையனவாயும் பலதிறப் பட்டனவாயும் உள்ளன. இவற்றை விரித்தெழுது முறை ரஸிகர்கள் கொண்டாடத்தக்கதாயுள்ளது.

இக் கட்டுரைகளைக் கற்றுத் தமிழ் மக்கள் பயனடை யத் தவறார்களென நம்புகிறேன்.

திருவிதாங்கூர்} எஸ். வையாபுரிப் பிள்ளை ஸர்வசாலை 20-7-54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/7&oldid=1298894" இலிருந்து மீள்விக்கப்பட்டது