பக்கம்:எழில் விருத்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

47

வாயில் வருபவர் முன்னே
    வணங்கி வரவேற்கும் கைபோல்
சாயல் குறையாக் குளத்துள்
    தாமரை கூம்பி அழைக்கும்!
பாயினை எங்கும் பரப்பி
    வைத்த மணவறை போலக்
காய்கனி பூத்த மலர்கள்
    கலைவிருந் துட்டும் சோலை!.................... 6

சோலையாம் கோட்டையின் உள்ளே
    துண்களாம் மாபலா தென்னை!
கோல வளைவுகள் கோட்டை
    கொட்டு முரசார்க்கும் வாயில்!
மாலையில் வந்தவர் குந்த
    வரிசையாய் இட்ட இருக்கை
மேலவர் கூடிடத் தென்றல்
    வேந்தன் அறம்பயில் சாலை!................... 7

வெட்டி நறுக்கிய வேலி
    விரிவில் விளங்கிடு பூக்கள்
நட்ட மரகதக் கோட்டை .
    நடுமதில் ஆடும் கொடிகள்!
தொட்டில் விழித்த குழவி
    தொங்கிச் சிரிப்பதைப் போலச்
சட்டி படர்ந்த கொடிப்பூ -
    தலைமேல் அசைந்திடும் சோலை!........... 8