பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனத்தின் அடிப்படை நோக்கும் போக்குமாக உள்ளது என்று சொல்லலாம். இந்த நூலில் நான் தெரிவித்துள்ள கருத்துக்களிலும், கண்டுள்ள முடிவுகளிலும் கருத்து வேற்றுமை கொள்ப வர்கள் இருக்கலாம். அவற்றை மறுப்பவர்களும் வெறுப்பு! வர்களும் இருக்கலாம். எனினும் நான் கொண்டுள்ள கருத்துக்கள், கண்டுள்ள முடிவுகள் ஆகியவற்றுக்குத் துணை நின்ற ஆதாரங்கள், மேற்கோள்கள் ஆகியவற்றை நான் போதுமான அளவுக்கு வழங்கியுள்ளேன் என்றே கருதுகிறேன். எவ்வாறாயினும் இந்நூலில் ' இலக்கிய நேயர்கள் தமது 'சிந்தனையைத் தூண்டும் பல புதிய, துணிந்த கருத்துக்களை நிச்சயம் காண்பார்கள் என்பதே என் நம்பிக்கை . மார்ச், 1966 - ரகுநாதன்