பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153


ர்த்தன பேரிகள்
        ஆர்த்தன. சங்கம்
ஆர்த்தன நான்மறை
        ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல்கலை
        ஆர்த்தன பல்லாண்டு
ஆர்த்தன வண்டினம்
        ஆர்த்தன அணடம்

முரசுகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; மறைகள் எங்கும் முழங்கின; தேவர்கள் ஆரவாரம் செய்தார்கள்; பல் கலைகளும் ஒலித்தன; பல்லாண்டு முழங்கியது; வண்டுகள் ஒலித்தன; அண்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.

𝑥𝑥𝑥𝑥

பேரிகள் ஆர்த்தன— மங்கல முரசங்கள் எங்கும் அதிர்ந்தன; சங்கம் ஆர்த்தன—சங்குகள் முழங்கின; நான் மறை ஆர்த்தன வேத கோஷங்கள் எங்கும் நிரம்பின. வானோர் ஆர்த்தன—தேவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்; பல்கலை ஆர்த்தன – பல்கலைகளின் ஆரவாரமும் ஒலித்தது; பல்லாண்டு ஆர்த்தன – பல்லாண்டு பல்லாண்டு என்று வாழ்த்தொலி வான முட்டியது; வண்டு இனம் – வண்டுக் கூட்டம்; ஆர்த்தன—ரீங்காரம் செய்து ஒலித்தன ஆர்த்தன அண்டம்—அண்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தன.

𝑥𝑥𝑥𝑥

இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த அதே வேளையில் இராமனுடைய சகோதரர்களுக்கும் அங்கேயே திருமணம் நடைபெற்றது.

20