50
ஆழம் மிக்கதும், அலை மோதுகின்றதுமான இந்தக் கங்கை ஆறு கடந்து இவர் போய் வடுவாரோ? எப்படிப்போவார் எனது தயவு இல்லாமல்? படகு விட நான் அனுமதி தந்தால் தானே இவர் கங்கையைக் கடத்தல் இயலும்? யானை, குதிரை, தேர் முதலிய படைகளுடன் வந்து விட்டால் விலகி வழி விடுவேனோ?
“நீ என் தோழன்” என்று அந்த இராமன் கூறிய சொல் ஓர் ஒப்பற்ற சொல் அன்றோ?
இவருக்கு நான் வழி விட்டால் “ஏழை வேடன் இறந்திலனே! உயிரோடு உள்ளானே! தடுத்து நிறுத்தாமல் வழி விட்டானே என்று என்னை ஏசமாட்டாரோ?”
★★
ஆழம்– அழமும்; நெடு– நீண்டதும்; திரை அலைமிக்கதும் (ஆகிய) ஆறு கடந்து– இந்த கங்கையைத் தாண்டி; இவர் போவாரோ– இவர் போய் விடுவாரோ? வேழ நெடும் படை– யானைகளை உடைய பெரிய சேனையை; கண்டு– பார்த்து; விலங்கிடும்– அஞ்ச ஒதுங்கிப் போகும்; வில் ஆளோ– வில் வீரனோ? தோழமை– என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?– நீ எனது தோழன் என்று அத்த இராமன் சொல்லிய சொல் நன்கு மதிக்கத் தக்க சொல் அன்றோ? ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ?– எளிய, ஏழையான வேடனாகிய நான் (குகன்) இங்ஙனம் மானங்கெட வாழ்தலை விட இறந்திருக்கலாமே என்று எனை உலகத்தார் பழிக்க மாட்டாரோ?
கங்கை இருகரை உடையான்
கணக்கு இறந்த நாவாயான்
உங்கள் குலத் தனி நாதற்கு
உயிர்த் துணைவன்; உயர் தோளான்