பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158



“இவன் குரங்கோ? அரக்கனோ? யாரோ தெரியவில்லை” என்று ஒரு கணம் ஐயம் கொண்டாள் சீதை.

“அரக்கனே ஆயினும் சரி. வேறு எவனாயினும் சரி. இங்கு வந்து இராமனுடைய பெயர் சொன்னான். என் உயிர் காத்தான். இதை விடப் பெரிய உதவி வேறு ஏதேனும் உண்டோ” என்று மனதைத் திடம் செய்து கொண்டு அநுமனிடம் பேசுகிறாள்.

“வீரனே! நீ யார்?” என்று கேட்டாள் சீதை.

உடனே அநுமன் தன்னுடைய வரலாறு கூறுகிறான். பிறகு தான் வந்த காரணமும் கூறுகிறான்.

***


எய்தினன் உரைத்தலோடும்
        எழுந்து பேருவகை ஏற
வெய்துறல் ஒடுங்கும் மேனி
        வான் உற விம்மி ஓங்க
உய்தல் வந்து உற்றதோ?
        என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்
அய்ய! சொல்! அனையன் மேனி
        எப்படித்து? அறிவி என்றாள்.

***

அந்தச் சொற்கள் கேட்டாள். “நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது போலும்” என்று மகிழ்ந்தாள். துயருற்றதால் வாடியிருந்த அவளது மேனி பருத்தது; கண்கள் நீர் சொரிந்தன. அதே சமயத்தில் ஓர் ஐயமும் தோன்றியது.

“இவன் உண்மையில் இராம தூதனோ அல்லது அரக்கர் தான் மாய உருக்கொண்டு நம்மை வஞ்சிக்க வந்தனரோ” என்பதுதான் அந்த ஐயம்,