பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232



(அவனுடன் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய நால்வரும் உடன் சென்றனர்).

***

எத்துணை வகையினும் - எவ்வளவோ விதங்களிலும்; உறுதி எய்தின - நன்மை பயக்கக் கூடியனவும்; ஒத்தன - (நீதி நூலுக்கு) இயைந்தனவும் ஆன நல்ல பொருள்களை; உணர்த்தினேன் - தெரிவித்தேன்; உணரகிற்றிலை - நீ அவற்றை அறியும் ஆற்றலற்றவன் ஆயினை; அத்த - என் தலைவனே; என் பிழை பொறுத்தருள்வாய் எனா - நான் செய்த தவறுதல்களை மன்னித்தருள்வாயாக! என்று இராவணனை நோக்கிச் சொல்லிவிட்டு, உத்தமன் அந்நகர் ஒழிய போயினான் - குணம் செயல்களால் மிகச் சிறந்தவனான விபீடணன் அந்த இலங்காபுரியை நீத்துச் செல்லலானான்.

***

அனலன் முதலிய நால்வருடன் கடற்கரை செல்கின்றான் விபீடணன். ஏன்? இராமன் அங்கு வந்துள்ளான் என்பதைக் கேட்டவுடன் அங்கு சென்றான். வானர சேனையைக் கண்டு வியப்படைகிறான். “என் செய்வது?” என்று அவன் அமைச்சர்களை நோக்கி கேட்கவும்,

***

மாட்சியின் அமைந்தது
        வேறு மற்று இலை;
தாட்சி இல் பொருள்
        தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன்
        என்று, கல்வி சால்
சூட்சியின் கிழவரும்,
        துணிந்து சொல்லினார்
.