பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260


அவ்வாறு நின்ற அங்கதனைஅவ்விராவணன் கண்களில் தீப்பொறி பறக்க நிமிர்ந்து பார்த்து,“நீ யார்? என்ன காரியம் பற்றி இங்கு வந்தாய்? இவர்கள் உன்னைக் கொன்று தின்பதற்கு முன் கூறு” என்றான்.

உடனே அங்கதன் சிரித்தான். சிரித்துவிட்டுப் பின் வருமாறு கூறினான்:

***

நின்றவன் தன்னை - அவ்வாறு வந்து நின்ற அந்த அங்கதனை; அன்னான் - அந்த இராவணன்; நெருப்பு எழ நிமிரப் பார்த்து - கண்களிலே தீப்பொறி தோன்ற நிமிர்ந்து பார்த்து; இன்று இவண் வந்து எய்திய நீ யார் - இன்று இங்கே வந்து அடைந்துள்ள நீ யார்?; எய்திய கருமம் ஏது - வந்த காரியம் என்ன?; இவர் கொன்று தின்னா முன்னம் - எனது பணியாளர் உன்னைக் கொன்று தின்பதன் முன்; கூறுதி தெரிய - நன்கு அறியுமாறு சொல்வாய்; என்றான் வன்திறல் - மிக்க வலிமையுடைய; வாலி சேயும் - வாலியின் மகனும்; வாள் எயிறு - ஒளிமிக்க பற்கள்; இலங்க - வெளியே ஒளிவீச; நக்கான் - சிரித்தான்.

***

(அங்கதன் தான் யார் என்பதைக் கூறினான்.)

‘பூத நாயகன்; நீர் சூழந்த
        புவிக்கு நாயகன்,இப்பூமேல்
சீதை நாயகன்; வேறு உள்ள
        தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற
        விதிக்கு நாயகன், தான்விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம்
        சொல்லிய வந்தேன்’ என்றான்.