பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அம்பு எய்தலும் சிறந்ததோர் அறமோ? என்று எண்ணுவான்.

***

“வில்லினால் துரப்ப அரிது, இவ்
        வெஞ்சரம்” என வியக்கும்
“சொல்லினால் நெடு முனிவரோ
        தூண்டினார்” என்னும்
பல்லினால் கடிப் புறும் பல
        காலும் தன் உரத்தைக்
கல்லி ஆர்ப் பொடும் பறிக்கும் அப்
        பகழியைக் கண்டான்.

“இந்தக் கணை சாதாரணமானது அன்று. வில்லினின்று பாய்ந்த வெஞ்சரம் அன்று இது? முனிவர் எவரோ மந்திரம் சொல்லி விடுத்த கணையேயாகும்” என்று முடிவு செய்தான் வாலி. வாலி தாங்க முடியாமல் பற்களை "நறநற' என்று கடித்தான்.

***

ஆர்ப்பொடும் - ஆரவாரத்துடனே தன் உரத்தைக் கவ்வி - தன் மார்பைத் துளைத்து; பறிக்கும் - பெயர்த்துச் சென்ற; அப்பகழியைக் கண்டான் - அந்த அம்பைக் கண்ட வாலி; இவ்வெம் சரம் - இக் கொடிய அம்பு; வில்லினால் துரப்பு அரிது - ஒரு வில்லினால் செலுத்தற்கு அரியது என வியக்கும் - என்று ஆச்சரியம் கொள்வான்; நெடு முனிவர் - நீண்ட தவம் புரிந்த பெரிய முனிவர்; சொல்லினால்- மந்திரம் ஜெபித்து; தூண்டினார் - ஏவினார்; என்னும் - என்று எண்ணுவான் பலகாலும் பல்லினால் கடிப்புறும் - பல முறை தன் பற்களை "நற நற” என்று கடிப்பான்.

***