பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளம் விடு தூது

13


போவென்பார் பாலைபோல் பொங்குநீ ரற்றபின்பே
வாவென்ற மற்றவர்க்கு வாய்க்காலால் - சாலமிகு

நீரளிக்கும் தன்மை பெற்ற நேரிய நற் பாலாறே!
சீர்புகழ எம்மாற் றிறமாமோ - பேரான

இத்தகைய பாலாற்றின் ஏத்தரிய வெள்ளமென
உய்த்து இவண் நிற்கும் உயர்புனலே - வித்தகமாய்

வழியை மிக அடைத்தாய் வல்லாரே யானால்
விழிவைத்து நோக்கி விளித்து - கழியாத

செல்வ வளம்பலவும் செம்மைப் பயன் நிறைவும்
நல்ல நிலையினிலே நல்குவிப்பாய் – பல்விதமாய்ப

பூக்கள் இருமருங்கும் பொழிய அதையேற்று
மீக்கொள் மரமடித்து மேவுகின்றாய் – நோக்கரிய

உந்தன்மேல் வேகமதில் உற்றவர் வீடுற்றவரே
அன்றித் திரும்பி இவண் யாரறிவார் – பொன்றலிலா

கச்சிப் பதிமருங்கில் காணப் பலபேர்கள்
இச்சிக்க வந்த எழில் நீரே – மெச்சிடு நற்

காதலவன் தன்கரத்தைக் காதலியும் பற்றியுடன்
ஏதமிலை என்றுனையே யேத்துவதும் கோதகன்ற

இளமை எழிற்சிறுவர் ‘எந்தாய் இந் நீர் நலத்தின்
வளமை வழுத்துரைப்பாய்’ யென்றே – மடமையுடன்

சீலை தனைப்பிடித்துச் சிங்கார மாய்க்கேட்க
சாலப் பலஉரைக்கும் தாயாருடன் – மேலான

மக்கள் பலரும் மகிழ்வாய் நல் லாருடனே
மிக்க நலம் வேண்டி மேவிடுவார் – துக்க நிறை

தீய மனதுக்கும் தீம்புனலே உன்செய்கை
தாயின் பரிவாகத் தண்மைதரும் – மேயவர்கள்

உந்தன் நலம்கண்டார் உற்று உனைப்பிரிய

சிந்தையிலு மெண்ணார்கள் தேர்ந்துரைப்பர் – பந்தமறு