பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. தமிழ்க் கலையின் தோற்றம்

அரசியலும் மொழியியலும் வாழ்வியலில் சிக்கிய பிறகு ஓய்வுகொள்ள இயலுமா? அவற்றுடன் சமய இயலும் என் வாழ்வில் இடம்பெற்றது. சைவசித்தாந்த மகாசபைக் கூட்டங்களுக்குத் தவறாது சென்று வந்தேன். அத்துடன் வெளியூர் திருக்கோயில் விழாக்களில் நடைபெறும் சொற்பொழிவுகளிலும் பங்குகொண்டேன். ஒருமுறை திருச்செந்தூர்ச் சென்று இரண்டு மூன்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தேன். அப்படியே கோவை முதலிய இடங்களுக்கும் சமய மாநாடுகளுக்குச் சென்றுவந்தேன். இவற்றுக்கிடையில் பள்ளிப்பணிக்கு மட்டும் நான் சோர்ந்ததே இல்லை. பள்ளியில் விடுமுறை எடுத்துக்கொண்டு வேறு பணிக்குச் செல்லவில்லை. மாவட்டக்கழகக் கூட்டங்கள் பெரும்பாலும் பள்ளி நாட்களில் வரும். அதற்கென மட்டும் திங்களுக்கு ஒருமுறை மாலை வேலைகளில் நான் விடுமுறை பெற்றுச் செல்வது வழக்கம்.

தேர்தலுக்குப் பிறகு பல நண்பர்கள் எனக்கு அறிமுகமாயினர். அவருள் ஒருவர் காளப்பர். அவர் காஞ்சிபுரம் ‘பஸ்’ நிலையத்தில் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தார். அவருடைய தமிழ்ப்பற்றும் தேவாரப் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனும் என் உள்ளத்தில் பதிந்தன. அவரை உயர்த்த வேண்டுமெனத் திட்டமிட்டேன். அப்படியே என்னிடம் பயின்ற இராசகோபால் என்பவர் படித்தபின் வேலையற்று இருந்தார். (அவர் இன்று இல்லை, இளமையிலேயே மறைந்துவிட்டார்). எனவே நாங்கள் மூவரும் சேர்ந்து அச்சகம் ஒன்றினை நிறுவலாம் என நினைத்தோம். அதற்கு முன்னரே, தேர்தல் முடிந்த உடனேயே நான் என் சொந்தப் பொறுப்பில் என்