பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

4விண்ணொளியும் விரிநீரும் விரைந்தபெருங் காற்றும்
மண்ணுயிரு மிருடீர மலருமிரு சுடரும்
தண்ணளியுந் தானாகித் தனிநின்ற நிலையைக்
கண்ணியதுங் குவியாத கையென்ன கையே
கைவீசிச் செல்வார்தங் கையென்ன கையே.


5பண்ணியமைந் தால்வனத்திற் பகருமையா யிரவர்
உண்ணிய நல்விருந்தளித்த உம்பர்பெருங் கோனை
நண்ணியெனை மீட்டருளும் நாதனைநள் ளிரவும்
எண்ணியெண்ணி யுருகாத நெஞ்சென்ன நெஞ்சே
இடம்பரந்து வல்லென்ற நெஞ்சென்ன நெஞ்சே.

அன்புறுபதிகம்.

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

பண்—திருநேரிசை

1 கொரி. 13

வெண்கல தாளம் போல விண்ணில மொழிகள்பேசி
முன்புகல் தரிசி யாகி முழுமறை யறிவுற் றாலும்
மன்பெரு மலையைப் பேர்க்கும் மால்விசு வாசியேனும்
அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.

நன்பொருள் யாவு மீந்து நல்கினு முடம்பு தீக்குத்
தன்புகழ் கூறா தென்றும் தயவொடு சாந்த மேவி
புன்செருக் கழுக்கா றின்றிப் புரிவினைத் தூய்மை கொள்ளும்
அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே

தன்பதம் சினமே தீங்கு தழுவிடா தநியா யத்தில்
இன்புற வின்றி மெய்யில் எழிலுற மகிழ்ந்தியாவும்
நம்பியே பொறுக்கும் தாங்கும் நலமுடன் விசுவாசிக்கும்
அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே

மன்பல பாஷை தீர்க்க தரிசன மறிவு மாயும்
புன்றலைக் குழவிக் கேற்ற புருஷனா யொழித்து விட்டேன்
நம்புதல் விசுவா சத்தில் நனிபெரி தாக மன்னும்
அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே