பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல் அனைவர்க்கும் உண்டாரும் அல்லல் அழியும் தனிநலம்போம்! இன்பமே சாரும்-இனிதாக இவ்வுலக நன்மைக்கே யான்வாழ்கின் றேன்என்றே ஒவ்வொருவ ரும்கருதி உண்மையாய்-எவ்வெவர்க்கும் கல்வியைக் கட்டாயத் தால்நல்கி யாவர்க்கும் நனியுழைந்தால்-அல்லலுண்டோ? நல்லுடலை ஓம்ப ஓம்புதல் வேண்டும் ஒழுக்கம்; அழுக்காறு நாம்பெறுதல் நாட்டை இழத்தலே-ஆம்! பொய்யா? மக்களிடைத் தாழ்வுயர்வு மாட்டாமை வேண்டும்நீள் பொய்க்கதையில் பொல்லா மடமையிலே-புக்குப் பிறர்க்கடிமை யுற்றும் பெருவயிறு காத்தல் அறக்கொடிதௌ தாய்ந்தமைதல் வேண்டும்-சிறக்கப் படைப்பயிற்சி, நல்ல பயனடையும் ஆற்றல் தடைப்பாடி தெய்தில் சாலும்!-நடைவலியாய் வையம் அறிதல் மறிகடலை வானத்தை ஐயம் அகல அளந்திடுதல்-உய்யும்வணம் பக்கலையும் பெற்றே இளமைப் பருவத்தின்