திருவருட்சிந்தனை
167
இறைவா! ஓயாது இயக்கியருளும் தலைவனே! நான் உன்னைப் போல உழைக்கவும் இல்லை. தொழில் செய்யவும் இல்லை. ஆனால் ஒய்வு தேவைப்படுகிறது.
இறைவா, நீயே என்பால் அருள்கொண்டு மூன்றில் ஒரு பங்கை உறக்கத்திற்கு ஒதுக்கிப் பூரண ஓய்வளித்துள்ளனை. இது போதவில்லை எனக்கு!
நான் வேலை பார்ப்பதே சராசரி 5 மணி நேரம் அல்லது கூடுதலாகப் போனால் 8 மணி நேரம்! அதாவது மூன்றில் ஒரு பங்குநேரம் உழைப்பு - வேலை. பிறிதொரு பங்கு எனக்காக!
ஒரு நாளில் 16 மணி நேரம் நான் என்னைக் கவனித்துக் கொள்ள, தூங்கி ஓய்வு பெற! 8 மணி நேரம் உழைப்பு - வேலை. இதற்கே நான் அலுத்துக் கொள்கிறேன்.
இறைவா! என்னைக் காப்பாற்றுக! நான் ஒய்வு விரும்பலாமா? எனக்கு ஓய்வு பழக்கமாகிவிட்டது. வழக்கமாகி விட்டது.
ஓய்வு எனக்காக என்ற நிலை மாறி, ஓய்வுக்காக நான் என்றாகிவிடுகிறேன். இறைவா, என்னைக் காப்பாற்றுக!
ஓய்விலாது உழைக்கும் ஆற்றலினை அருள் செய்க என் வாழ்வு உழைப்பாகவே அமைக! இறைவா, அருள் செய்க!