எங்கே போகிறோம்!
361
நமது நாடு வளமான நாடு. ஆனால் மக்களில் பெரும்பாலோர் ஏழைகள்; திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியும், சமநிலை விநியோகமும், நமது நாட்டுக்கு இன்று உடனடியாகத் தேவை.
நமது சமுதாயம் தேனிக்களைப் போல, கூட்டுறவு முறையில் பணிப் பகிர்வு செய்து கொண்டு, அயர்விலாது, சுறுசுறுப்புடன், ஒரே குறிக்கோளுடன் உழைத்தால்தான் நமது நாடு வளமான நாடாக முடியும். எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ இயலும்,
தேனிக்களுக்கு வாய்த்தது இயல்பூக்கம். அதுபோல நமக்கும் பொருளாதார முயற்சிகளில், உற்பத்தி சார்ந்த பொருளாதார முயற்சிகளில் ஈடுபட்டு உழைப்பது இயல்பானதாக, ஜீவ சுபாவமாக என்று மாறுகிறதோ அன்றுதான் நாம் பொன்வளம் நிறைந்த புவியைக் காணலாம். பொதுவுடைமையைக் காணலாம்.
இந்தத் திசையில் இன்று நாம் செல்லவில்லை. நாம் செல்லவேண்டிய திசை, புவியைப் பொதுவில் நடத்தும் திசையாக, உற்பத்தி சார்ந்த பொருளாதார ஆக்க வழியிலான திசையாக, பிறர் பங்கைத் திருடாத திசையாகப் பார்த்து நடைபோடுவோமாக!
வளர்க உற்பத்தி!
மலர்க பொதுமை!
(17-9-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)
இன்றைய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? வேளாண்மைப் பொருளாதார வகையில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? நாம் எங்கே போக
கு.xvi.24
கு.xvi.24