இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
558
- நடக்க இயலாத நெருஞ்சிக் காடுகளும்
- நந்தவனங்களாயின!
- சஹாராக்களைக் கூடச் சமவெளிகள்
- ஆக்கிய சாதனையாளரே!
- ஆட்டுப்பாலும் நிலக்கடலையும்
- தின்றவாறே
- ஏகாதிபத்தியத்தை எஃகு குரலில்
- அதட்டினாரே காந்தியடிகள்!
- அவர்,
- மறைந்து விட்டார் என்றிருந்தோம்!
- இல்லை! இல்லை!
- சிந்தனைச் சிற்பி சாக்ரடீஸின் பகுத்தறிவு,
- பேரறிஞரின் பேச்சாற்றல்,
- விவேகானந்தரின் ஆன்மீகப் பணி,
- நேருவின் சோசலிஸம்
- மகாத்மாவின் மனிதநேயம்
- ஆகிய அனைத்தின் ஓர் உருவாய்
- தவக்கோலத்தில்
- தமிழ்மாமுனிவராய் அவதரித்தவரே!
- காந்தியின் காலம் ஏசுவின் காலம்
- என்பதுபோல்
- அடிகளாரின் காலம் என்பதை
- வருங்கால வரலாற்று ஏடுகள்
- எழுதி வைக்கும்.
- அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம்
- என்ற பெருமையுடன்
- அவரின் தூய மனிதநேயப்
- பணியினைப்
- பலப்படுத்தும் அரணாய் அமைவோம்!"
தொலைவிலிருந்து ஆன்ம நாயகராக மகாசன்னிதானத்தின்பால் கொண்ட வளர்பிறை என வளர்ந்த வண்ணம் இருந்தது. நவீனத்தை ரசிக்கின்ற இளைஞனின் ஆன்மத் துடிப்பினை மகாசன்னிதானம் உசுப்பி விட்டார்கள்.