பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கபிலரும் ஆரிய அரசன் பிரகத்தனும் ஆரியரையும், அவர் பழக்க வழக்கங்களையும் பல நாறு ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்கள் அறிந்திருந்தனர். பிடியானே பழக்கும் ஆரியரையும், கழைக்கயிற்றின்மேல் கின்று ஆடும் ஆரியக் கூத்தரையும் தமிழ்ப் புலவர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளனர். ஆரியப் ப்ொருநன் என் பவன், தமிழகத்தே வந்து, தமிழரசர்களால் பெருவீரன் என மதிக்கப் பெற்று விளங்கிய வரலாற்றினைப் பரணர் பாக்களில் காண்கிருேம். ஆரியம், தமிழகத்தில் கால் கொள்ளத் தொடங்கிய அடிச்சுவடுகளில் ஒருசில இவை. வடநாட்டை வாழ்விடமாகக் கொண்ட ஆரியர், தமி ழகத்தின் தனிச்சிறப்புணர்ந்து, ஆங்கே தங்கள் நிலையை உறுதியுடையதாக்கி உயர்த்திக் கொள்ளப் பெரிதும் முயன்றுள்ளனர். அதனல், அவ்வாரிய அரசர்களுக்கும், தமிழ் அரசர்களுக்கும் இடையில் போர் பல நடைபெற். மறுள்ளன. அங்கிகழ்ச்சிகளைத் தமிழ்நூல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஆரிய அரசர்களே வென்ற ஆண்மைச் சிறப்பைத் தம் பெயர்களோடு இனத்துப் பெருமை கொண்ட அரசர்களும் உளர். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டிய அரசன் பெய ரைக் காண்க. தமிழ்.அரசர்கள், ஆரிய அரசர்களோடு. போராடிப்பெற்ற வெற்றியைப் புலவர்களும் பாராட்டியுள்ள னர். சேர வேந்தன் ஒருவன், ஆரியரை அலறத் தாக்கி அவர் இமயத்தில், தன் விற்கொடியைப் பொறித்தான். என்று பரணர் பாடியுள்ளார். ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப்பிணித்தோன். தஞ்சை மாவட்ட வல்லத்தின் அருகே ஒரு ஆரியப்படை போரிட்டு அழிந்தது என்று ஒரு புலவர் கூறியுள்ளார். சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளே ஆரியர் படையின் உடைக. இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்,