பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


இனி மனிதராய் வாழ்வும், கட்டாயமாக விடுதலை வேண்டும். ஆனால் நம்மால் முடியுமா?" என்று கேட்டனர்.

விடுதலை வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுவிட்ட பிறகு மறு கேள்வி எது? அவர் கேட்டார்.

"அவர்கள் பலசாலிகள்" மக்கள் கூறினர்.

"நாம் பலம் பெறவேண்டும். பெறுவோம்" அவர் உரைத்தார், உறுதியுடன்

"சிறையிலே தள்ளுவார்களே"--என்றனர் மக்கள்.

"தள்ளுவர்--ஆனால் இப்போது உள்ள இடமும் சிறைதான்; இது பெரிய சிறை" அவர் பதில் சொன்னார் நகைச் சுவையுடன்.

தடியடி, துப்பாக்கி, தூக்குமேடை, அந்தமான் தீவு என்பன போன்ற எத்தனையோ ஆபத்துக்கள் அடுத்தடுத்து வரும்--உரிமைப் போரிலே உள்ள ஆபத்துக்களை அவர் ஒளிக்காமல், குறைக்காமல் கூறினார்.

இவ்லளவையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை--மரணபயமின்றி இக்காரியத்திலே ஈடுபடத் தீர்மானித்துவிட்டேன்--ஆயுத பலத்தை நம்பி அல்ல; மன உறுதியை நம்பி--நாம் நமது பிறப்புரிமைக்காகப் போராடுகிறோம். இது தர்மம் என்று பலத்தை நம்பிப் போரைத் தொடுக்கிறேன் என்றார்; தொடுத்தார். வயலோரத்திலிருந்து வாட்டமுற்ற உழவன் முதற்கொண்டு, வசீகர் வாழ்விலே இருந்துவந்த சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை வரையிலே. அவர் முகாமில் வந்து குமிந்தனர்.

வேறு நாடுகளிலே விடுதலைப் போர் கொடுத்தவர்கள் இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ, சொந்தத்திலேயோ, வேறு நாட்டின் துணைகொண்டோ, இரானுவத்தைத் திரட்டுவது; போர்ப் பொருளைக் குவிப்பது; மறைந்திருந்து தாக்குவது; சதி செய்வது என்ற பல முறைகளைக் கையாண்டனர். தாய் நாட்டின் விடுதலைக்காக இவையாவும். எனவே, சரியா? தவறா? என்ற கேள்விக்கும் இடம் இல்லை என்றனர்.