பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


மனப்பான்மையற்றவர்கள் காலத்தைக் கொலை செய்வது 'ஓய்பு' அல்ல--அது சோம்பல், ஆக, யாராவது. ஒரு வேலையும் செய்யாது இருக்கும்போது அவர் ஓய்வாக இருக்கிறார் என்று கூறிவிடுவது கூடாது.

ஓய்வு வேறு; வேலையற்று இருப்பது முற்றிலும்வேறு.

காலை முதல் மாலைவரை பாடுபட்டு வேலை செய்து பிழைக்கும் பாட்டாளிக்கு, இரவு தெருக்கோடியில் நடைபெறும் 'கூத்து' ஓய்வு நேரம் பொழுதுபோக்காக அமைகிறது-- கூத்தாடுபவர்களுக்கோ; இரவு முழுவதும் கூத்து ஆடி அலுத்து, காலையிலே படுத்துத் தூங்கி, பகலில் விழித்தபடி புரண்டுவிட்டு மாலை நேரத்திலே வெளியே சென்றுவருவது ஓய்வு நேரம்--பொழுது போக்கு நேரம்--வேடிக்கைக்காகச் சொல்வார்கள்--ரயில் ஓடும் போது போர்ட்டருக்கு ஓய்வு--ரயில் நின்று சில நிமிஷம் ஓய்வு கொள்கிறதே அப்போது போர்ட்டாருக்கு வேலை--அதுபோல ஓய்வு நேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம்.

வேலை செய்து செய்து அலுத்து, இனி வேலை செய்யவே முடியாத நிலை ஏற்பட்டால், வேலை செய்யாமல் இருப்பதை. 'ஓய்ந்து விட்டான்' என்று கூறுகிறோம். அந்த நிலையல்ல 'ஒய்வு நேரம்' வேலை செய்கிறான்-- இடையே வேலை ஏதும் செய்யாமலிருக்கிறான்--அந்த வேளை தான் 'ஓய்வு' இந்த ஓய்வு நேரம்--ஓய்வின்தன்மை, இதைக்கொண்டுதான், அந்தச் சமூகத்தின் நிலைமையை மதிக்கிறார்கள் அறிவாளிகள். பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும்' ஓய்வு' இருக்கிறதே, அகையே நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள் நல்யிறிவாளர்கள்.

உழைத்துத்தான் வாழ வேண்டும்--வாழ்வு, உரிமை, உழைப்பு, கடமை.

ஆனால் உழைப்பு, உடலும் உள்ளமும் முறிந்து போகாத அளவிலேயும் வகையிலேயும் இருக்கவேண்டும். வாழ்விற்கு வகை தேடுவதற்காகப் பாடுபடவேண்டும்.