பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி. ————————————————————————

1

கோபாலன் ஒரு கெளரவமுள்ள வாலிபத்தொழிலாளி. நற்குண நற்செயல்களுக்கு இருப்பிடமானவன். சிறந்த அழகன், உடற்கட்டு வாய்ந்த வீரன். ஆனல் அவன் ஏழை சேற்றில் மலர்ந்த செந்தாமரை! எனவே அவன் அழகும் திறமையும் குடத்திற்குள் வைத்த விளக்காயின்

அரங்கனூர்லே செல்வங்கர்களில் முதற்புள்ளியாக ஜமீன்தார் விமலானந்தரைத்கான் சொல்ல வேண்டும். ஏராளமான சொத்து, மிகுந்த செல் வாக்கு ஆனால் அபிராமியைக் கவிர அவருக்கு வேறு சக்த்தியே கிடையாது. அது ஒரு பெரிய குறைதான். அது கான் போகட்டுமென்ருலும், அபிராமியாவது சுமங்கிலியாக வாழலாகாதா? அவள் பச்சைக் குழந்கையிலேயே ஒரு செல்வந்தரின் மகனுக்கு "செல்லக் கலியாண்ம்' செய்விக்கப் பட்டுத் தாலியறுத்தவள் பரிகாபத்துக்குரிய பால்ய விதவை!

விமலானந்தர் களங்கற் குணமுடையவர். ஆனால் முன்கோபி. மதத்தில் வைதிகத்தில்-மிகுந்த பற்று. பிடிவாதமுள்ள சுபாவம்! அபிராமி சிறுவயதி லேயே விதவையாகிவிட்டது, அவளது முன் ஜென்மப் பலன்' என்பது அவரது கம்பிக்கை இப்ப்டிப் பட்டவரையுங்கூட காகரிகம் விட்ட பர்டில்லை. ஆம் அதுதானே காலத்தின் தன்மை!

ஜமீன்தார் விழலானந்தர், தன் பழைய வீட்டுக் கருகில் புதுமையான முறையிலே ஒரு பெரிய மாளி