பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிஞர் அண்ணாத்துரை



எல்லா மக்களும் இன்ப வாழ்வு பெற வேண்டுமென்ற சிறந்த இலட்சியமே அவருக்கு. இது கிடைக்க விடாமல் தடுப்பது எதுவாக இருப்பினும், அதனைத் தவிடு பொடியாக்க வேண்டுமென்று அவர் துடித்தார்.

ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்கு வாத நோய்தான்--சமுதாயத்துக்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினார். அவருடைய தீவிரவாதத்தைக் கண்டு திகில் கொண்டவர்கள் அவரை நாத்திகர் என்று கூறினர்; அவர் அதனை ஏற்றுக்கொண்டார்; சென்னையில் நாத்திகர் மாநாட்டையே நடத்தினார்; இந்தியாவிலேயே யாரும் செய்யாத காரியம் அது. மதத்தின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டுப் பழி பாவத்திற்கு அஞ்சாமல், பாமர மக்களைக் கசக்கிப் பிழியும் வர்க்கத்தை நோக்கி, அந்த மாவீரர் கேட்டார்.

'உலகில் உயிர்கள் படுந்துயரத்திற்கு யார் ஜவாப்தாரி? பசுவைப் புலி பிடித்துத் தின்னவும், தேரையைப் பாம்பு பிடித்துத் தின்னவும் யார் கட்டளையிட்டார்? இந்தக் கொடூரக் காட்சியை விடவா வேறு உளது? நோய், வறுமை, பஞ்சம், புயல் வெள்ளம் முதலிய இயற்கைச் சம்பவங்களால் மாந்தருக்கு எவ்வளவு இம்சை?

கடவுளை தயாபரன், சர்வ ரட்சகன், ஆபத்பாந்தவன் என்ற மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க முடியுமா ?சமணர்களைக் கழுவில் ஏற்றினது கடவுள் பெயரால் அன்றோ ? கோடான கோடி பிசாசு பிடித்தவர்க-


18