இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்
57. கழுத்துக்குமேல் துண்டிக்க
வேண்டுதல் |
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவன் தண்டனையை நிறைவேற்ற வந்த கொலையாளியிடம் “நான் சாகப்போகிறேன். அதை நீங்கள் செய்யுங்கள்; ஆனால் உங்கள் கொலை வாள் என் கழுத்தில் மேல் பகுதியில் விழும்படி துண்டியுங்கள்” என்று வேண்டிக்கொண்டான். ‘ஏன்?’ என்று கேட்டபோது அவன்
சொன்னான், “என் கழுத்தின் கீழ்பகுதியில் கொப்பளம் (புண்) ஒன்று உள்ளது. அதன் மீது வாள்முனைப் பட்டால் வேதனை அதிகமாகும் அல்லவா” என்று.