29 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ
முகமதியர்
"அந்த ஊரில் கூட்டம் எப்படி இருந்தது?" என்று இவரை அன்பர் கேட்டார். "கோயிலில் கூட்டம். சைவர்கள் ஏராளமாகக் கூடியிருந்தார்கள். முகமதியர்களும் வந்து கேட்டார்கள்" என்றார் இவர். "முகம்மதியர்களா? சிவன் கோயில்
அல்லவா?" என்று வியப்புடன் கேட்டார் அன்பர்.
"ஆமாம்; அவர்களுக்குத் தனியிடமே ஒதுக்கி யிருந்தார்கள்." -
"ஆச்சரியமாக இருக்கிறதே!"
"ஆச்சரியம் என்ன? முகமதியர் என்றால் யாரென்று நினைத்தீர்கள்? முகமாகிய மதியை உடைய பெண்களையல்லவா சொல்கிறேன்?" என்று விளக்கினார். இவர்.
ஆடையும் பாலும்
ஒர் அன்பர் வீட்டுக்கு வேறு ஒரு நண்பருடன் இவர் சென்றிருந்தார். அப்போது அங்கே ஒரு குழந்தை நின்று கொண்டிருந்தது. தலைக் கோலம், ஆடை வகை ஆகியவற்றைக் கண்டு அது ஆணா, பெண்ணா என்று தெரியாமல் இருந்தது, உடன் வந்த நண்பர், "இந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரியவில்லையே!"