30
சொன்னால் நம்பமாட்டீர்கள்
நான் கலக்கத்துடன் அவருக்குப் பின்புறம் போய் அமர்ந்தேன். எனக்கு அருகிலிருந்த ஒருவர் என்னைப் பார்த்து, ரொம்ப நன்றாகப் பேசினீர்கள், இதையெல்லாம் எதில் படித்தீர்கள்? என்று கேட்டாரே ஒரு கேள்வி. எனக்கு வெல வெலத்து விட்டது “ஏன்?” என்று கேட்டேன்.
“இல்லை. இதை நானும் எதிலோ படித்த மாதிரி இருக்கிறது” என்றார். சரிஇனி இவரிடம் மறைக்கக்கூடாதென்று, ஆனந்த விகடனில் இருந்து என்றேன்.
"யார் எழுதியது தெரியுமா?” என்றார்.
“கல்கி” எழுதியது என்றேன் நான். “கல்கியைத் தெரியுமா?” என்றார் அவர். “தெரியாது நான் பாத்ததில்லை என்றேன்.”
“பார்த்தால் என்ன செய்வீர்கள்?” என்றார் அவர்.
‘பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டுமென்று இருக்கிறேன்” என்றேன்.
“சரி அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க” என்றார்.
ஏன் என்றேன்.
நான்தான் அந்தக் ‘கல்கி’ என்றாரே பார்க்கலாம்.
எனக்கு சந்தோச மிகுதியால் மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. அவர் கைகளைப் பற்றி-பிடித்து என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். என் ஆனந்தக் கண்ணீர் அவர் திருக்கரங்களை நனைத்தது. நான் அவர்மீது வைத்திருந்த அன்பைக் கண்டு அவர் உருகிவிட்டார். அன்று தொடர்ந்த எங்கள் அன்பு இன்றளவும் என் இதயத்தில் பசுமையாக இருந்து வருகிறது.