பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

595


ஏனென்றால் இவை பார்ப்பானின் மூளையில் தோன்றியவைதானே?

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்? கல்வித்துறை அதிகாரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், தாழ்த்தப்பட்ட வகுப்பார் இருந்தால், இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்தில் வருமாடி கல்வித்துறையில் பார்ப்பன் ஆதிக்கத்தை, உயிருக்குத் துணிந்து ஒழித்ததன் பலன் இதுதானா? இராஜாஜி, பக்தவத்சலனார் உத்தரவுகளுக்கும் இதற்கும் என்ன பேதம்?

உத்தியோகத்தில் தகுதி திறமை பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று, 40 ஆண்டுகளாய்ச் சொல்லிப் போராடி வருகிற நான், பாஸ் செய்தவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்குத், தரம் பார்க்க வேண்டுமென்றால், பெரிதும் சாதித் தரம் தவிர வேறு தரம் என்ன என்று கேட்கிறேன்! நாம்தான் பாஸ் பண்ணாதவனை பெயில் ஆக்கி விடுகிறோமோ

நான் மனித சமுதாயத்தின் தகுதி, திறமை, தரம் என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடையவன். அவைகளைப்பற்றி நான் எழுதி வந்த கருத்துகள் இன்னமும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்காக உழைத்து வந்தவன்; வருபவன் நான், மந்திரிகள் முதல், அவர்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகித் தீரவேண்டும் என்பவன்,

கல்வி விஷயத்தில், இந்த ஆட்சியைவிடக் காமராஜர் ஆட்சி, மிக்க தேவலாம் என்று ஆகிவிடக்கூடாது,

கண்டிப்பாய் அரசாங்க அகராதியில், தகுதி திறமை தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும். இது என் சொந்தக் கருத்து,

பெரியார் உடல்நலம் சீர்கெட்டது. ஹெர்ணியா தொல்லையால் சோர்வும் களைப்பும் ஏற்பட்டதால், சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் 19-7-72 அன்று சேர்க்கப்பட்டு, டாக்டர் கே. ராமச்சந்திரா அவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறார் என வீரமணி அறிவித்தார். 18-7-72 அன்று “என்னைப்பற்றி" எனப் பெரியார் ஓர் அறிய விஷய விளக்கத் தலையங்கம் எழுதியிருந்தார். "பெரியோர்களே, நண்பர்களே, தோழர்களே! சில தெரிவித்துக் கொள்ளுகிறேன் நான் செய்து வந்த, வருகிற. தொண்டு நீங்கள் அறிந்ததேயாகும். என் நலத்தை, செல்வத்தை, செல்வாக்கைப் பொது நலத்தொண்டுக்குக் கொடுத்தேனா, அல்லது பொதுத் தொண்டால் இவற்றைப் பெருக்கினேனா என்பது உங்களுக்குத் தெரியும்

இராஜாஜி அவர்களும், இருகவர்னர்கள், இருகவர்னர்