பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சி.என். அண்ணாதுரை கடலைக் கண்டால் ஓர் பாடல்; கரியைக் கண்டால் ஓர் பாடல்; தளிரைக் கண்டு ஓர் பாடல்; தனது காதலியைக் கண்டு ஓர் பாடல் எனத் தமிழர் தமது இன்ப உணர்ச்சியை இசை வடிவில் எத்துணையோ சிறப்புடன் வெளிப்படுத்தி வாழ்ந்தனர். இன்று தியாகராயர் கிருதிகளைவிட வேறு இல்லை என்று அவர்கள் முன்னால் கூறப்படுகிறது. இசைச் செல்வத்தை இவ்வளவு பெற்று முன்னம் வாழ்ந்த தமிழர்,இன்று கேட்பது, தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த முயற்சியில் தமிழர் வெற்றி பெற்றால் இழந்த தமிழ் இசையை மீண்டும் பெற முடியும். ஆரியம் தமிழரின் எல்லா வகையான செல்வங்களையும் கொள்ளை கொண்டது போலவே, இசைச் செல்வத்தையும் கொள்ளை கொண்டது. இதனை அறிய தமிழர் தொன்மை பற்றி ஆசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய அரிய நூலையும் மற்றையோரின் ஆராய்ச்சி நூல்களையும் தமிழர் படிக்க வேண்டுகிறோம். தமிழரின் மொழி வளம்,ஆட்சி வளம் முதலிய துறைகள் பற்றிய அரிய ஆராய்ச்சிகளிலே உண்மைகள் மிளிரும். தோழர் தேவநேயப் பாவாணர் எழுதிய ஒப்பியல் மொழி நூலில் உள்ளவைகளைத் தமிழர் கற்றுணர வேண்டும். அவர்களுக்குப் பிடிக்காது தமிழ் இசை மறைந்து, வேற்று மொழியில் பாடல் பரவியதனால், நாம் இன்பத்தை மட்டுமே இழக்கவில்லை; இயற்கையின் அழகை உணரும் அறிவையும் பகுத்தறிவுத் திறனையும் இழந்தோம். புதுப் பாடல்கள், புதுக் கருத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும். வெறும் பக்திரசம் மட்டுமே ஊட்டக்கூடியதாக இருத்தல் போதாது. பக்தி ரசம் தமிழ் இசையில் இன்றும் உண்டு. ஆனால் ஆரியருக்கு அது பிடிக்காது. திருத்தாண்டகம். பிள்ளைத்தமிழ் போன்றவைகளைத் தோழர் சுந்தரமூர்த்தி ஓதுவார் எத்துணை இன்ப ரசத்துடன் பாடினார்.