பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழரின் மறுமலர்ச்சி 45 அந்தச் சிறு கும்பலின் சக்தி அவருக்குத் தெரியக் காரணமிருக்கிறது. அந்தச் சிறு கும்பல், பெரும்பாலானவரை ஆட்டிப் படைக்கும் சூழ்ச்சி பற்றி அவர் அறிந்து கொள்ளாதிருக்க முடியாது. அவர் அதுபற்றி வெளியே பேசாதிருக்கிறார். ஆனால் அன்று இசை அவருடைய உள்ளத்திலே சென்று உண்மையை இழுத்து வெளியே எறிந்தது என்றே நாம் நம்புகிறோம். ஏழை எளியவர் மொழி "ரஷிய மொழி, ஏழை எளியவர் மொழி; பிரெஞ்சு மொழி கனவான்கள் பேசும் மொழி. ஆகவே நாங்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறோம்" என்று உரைத்த ரஷிய சீமான் கும்பல்போல், இங்கு ஒரு சிறிய கூட்டத்துக்குத் தமிழ் மொழியிடம் துவேஷமிருக்கிறது. இதுவரை. அவர்கள் பெரும்பாலோரை அடக்கி ஒடுக்கி வாழ்ந்தார்களே, அதையேதான் இம்மனப்பான்மையும் காட்டுகிறது" என்று தோழர் சொக்கலிங்கம் கூறினார். உண்மை! ரஷ்ய சீமான்கள் பிரெஞ்சு மொழியைக் "கனவான்கள்" மொழி என்று கூறினதுபோல், இங்கு ஒரு சிறு கூட்டம் சமஸ்கிருதத்தைத் "தேவ பாஷை' என்று கூறிக் கொண்டிருக்கிறது; பெரும்பாலானவர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி புரிகிறது. ஜார் காலத்துச் சீமான்கள், மன்னனும் மதகுருமார்களும் வாழ்க! மற்றையோர் மாளினும் மாள்க! என்றுரைத்தது போலவே, மனுவும் வாந்தாதாவும் அருளியது, பூதேவர்களிடம், மற்றையோர் மண்டியிட்டே கிடத்தல் முறையென்று கூறுகிறது. ரஷிய உழவனோ, பாட்டாளியோ தொட்டால் தீட்டு எனக் கருதினானில்லை. இங்குள்ள சிறு கூட்டம் பெரும்பாலான மக்கள் தொட்டால் தீட்டு என்று கூறுகிறது.அவர்களுடன் ஒன்றாக இருந்து உண்ண மறுக்கிறது; தொழ மறுக்கிறது.