194
தமிழ்ப் பழமொழிகள்
கோமுட்டி சாட்சி.
கோமுட்டிப் பிசாசு பிடித்தால் விடாது. 9990
கோமுட்டிப் பிள்ளை வீணுக்கா நெய்ப்பல்லாயைப் போட்டு உடைக்கும்?
கோமுட்டி புத்திக்கு மோசம் இல்லை.
கோமுட்டி புத்திக்கு மோசம் லேது; மோசம் வந்தால் செப்ப லேது.
- (லேது - இல்லை; தெலுங்கு.)
கோமுட்டியைச் சாட்சிக்குக் கூப்பிட்டது போல.
கோமுட்டி வீட்டுப் பெருச்சாளிக்குக் கொண்டதென்ன? கொடுத்ததென்ன? 9995
- (கொண்டது கொடுத்தது தெரியாது.)
கோயில் அருகே குடி இருந்தும் கெட்டேன்.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி.
- (திருவாரூரில்.)
கோயில் சாந்து ஒன்பது குளிக்கு மாறாது.
(சீரங்கத்தில்.).
கோயில் பூனைக்குப் பயம் ஏது? 10000
கோயில் மணியம் என்று கூப்பிட்டால் போதும்.
கோயிலையும் குளத்தையும் அடுத்திருக்க வேண்டும்.
கோர்ட்டுக்கு முன்னால் போகாதே; கழுதைக்குப் பின்னால் போகாதே.
கோரக்கல் வைத்தியம் குணத்துக்கு ஏற்குமா?
கோரைக் கொல்லை பிடித்தவனும் மலடி ஸ்திரீயை மணந்தவனும் பயன் அடைய மாட்டார்கள். 10005
கோரை குடியைக் கெடுக்கும்.
கோரை முடி குடியைக் கெடுக்கும்.
கோல் ஆடக் குரங்கு ஆடும்; அதுபோல மனம் ஆடும்.
கோல் இழந்த குருடன் போல.
கோல் உயரக் கோன் உயர்வான். 10010
கோல் எடுக்கக் குரங்கு ஆடும்.
- (கோல் ஆட.)
கோல் எடுத்த பிள்ளை குருட்டுப் பிள்ளை.
- (கொடுத்த பிள்ளை. பிள்ளை தன் கண்ணைத் தானே குத்திக்கொள்ளும்.)