178
தமிழ்ப் பழமொழிகள்
பட்டு மடிச்சால் பெட்டியிலே; பவிஷு குறைந்தால் முகத்திலே.
பட்டைக்குத் தகுந்த பழங்கயிறு.
பட்டை நாமத்தைப் பாக்கச் சாத்தினான்.
பட்டை பட்டையாய் விபூதி இட்டால் பார்ப்பான் என்று எண்ணமோ?
படர்ந்த அரசு, வளர்ந்த ரிஷபம். 15285
- (திருவாவடுதுறையில்.)
படாத பாடு பதினெட்டுப் பாடும் பட்டான்.
படாள் படாள் என்கிற பாடகன் மகள் பாடையில் ஏறியும் பட்டானாம்.
படி ஆள்வார் நீதி தப்பின் குடி ஆர் இருப்பார் குவலயத்தில்,
படிக்கம் உடைந்து திருவுருக் கொண்டால் பணிந்து பணிந்து தான் கும்பிட வேண்டும்.
படிக்கிறது சிவ புராணம்; இடிக்கிறது சிவன் கோயில், 15290
- (படிக்கிறது திருவாசகம்.)
படிக்கிறது திருவாய்மொழி; இடிக்கிறது. பெருமாள் கோயில்.
- (படிக்கிறது ராமாயணம்.)
படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்குத் தடிப்பாயப் போம்.
படிக்கு அரசன் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.
படிக்குப் படி நமசிவாயம்.
- (பிடிக்குப் பிடி.)
படிக்குப் பாதி தேறாதா? 15295
படிக்கும் மரக்காலுக்கும் இரண்டு பட்டை. பார்ப்பாரப் பையனுக்கு மூன்று பட்டை,
படித்த முட்டாள் படு முட்டாள்.
படித்த முட்டாளாக இருக்கிறான்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,
படித்தவன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர். 15300
படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் கொக்குக்கும் அன்னத்துக்கும் உள்ள வித்தியாசம் போல.
படித்த வித்தை பதினெட்டும் பார்த்தான்.
- (நாஞ்சில் நாட்டு வழக்கு.)
படித்துக் கிழித்தான்.