186
தமிழ்ப் பழமொழிகள்
பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது; ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.
- (அஞ்க வந்தாலும் அவசரம்.)
பத்து வயதானால் பறையனுக்காவது பிடித்துக் கொடுக்க வேண்டும்.
பத்து வயதிலே பாலனைப் பெறு.
பத்து வராகன் இறுத்தோம்; என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே. 15475
பத்து வராகனுக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை.
பத்து வருஷம் கெட்டவன் பருத்தி விதை; எட்டு வருஷம் கெட்டவன் எள் விதை.
பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக்கூடாது.
பத்து விரலாலே வேலை செய்தால் ஐந்து விரலால் அள்ளிச் சாப்பிடலாம்.
- (பத்து விரலாலே பாடுபட்டால்)
பத்தூர் பெருமாளகரம்; பாழாய்ப் போன கொரடாச்சேரி; எட்டூர் எருமைக் கடா? இழவெடுத்த நாய். 15480
பத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தையிலே வைத்தால் அது பத்தையைப் பத்தையைத்தான் நாடும்.
- (யாழ்ப்பாண வழக்கு)
பத்தோடே பதினொன்று; அத்தோடே இது ஒன்று
பத்மாசுரன் பரீட்சை வைத்தது போல.
பதக்குக் குடித்தால் உழக்குத் தங்காதா?
பதக்குப் போட்டால்முக்குறுணிஎன்றானாம். 15485
பதத்துக்கு ஒரு பருக்கை.
பதம் கெட்ட நாயைப் பல்லக்கில் வைத்தால் கண்ட இடமெல்லாம் இறங்கு இறங்கு என்னுமாம்.
பதமாய்ச் சிநேகம் பண்ண வேண்டும்.
- (செய்ய வேண்டும்)
பதவி தேடும் இருதயம் போல.
பதறாத காரியம் சிதறாது. 15490
பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும்.
பதறின காரியம் பாழ்.