தமிழ்ப் பழமொழிகள்
207
பாம்புக்கு மருந்து கேட்கத் தேளுக்குப் மந்திரித்தது போல.
பாம்புக்கு மூப்பு இல்லை.
பாம்புக்கு ராஜா மூங்கில் தடி.
பாம்புக்கு விஷம் பல்லிலே; பரத்தைக்கு விஷம் உடம் பெங்கும். 15985
பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதா?
பாம்பு கடித்தாலும் பிழைக்கலாம்; பாக்குக் கடித்தால் பிழைக்க முடியாது.
பாம்புச் செவி.
பாம்பு தன் பசியை நினைக்கும்; தேரை தன் விதியை நினைக்கும்.
பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடுமுறி நமக்கு என்று இருக்க வேண்டும். 15990
- (நடுத்துண்டு, நடுக் கண்டம்.)
பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலே சாவு.
பாம்பு பகையும் தோல் உறவுமா?
பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும்.
பாம்பு பசியை நினைக்கிறது; தேரை விதியை நினைக்கிறது.
பாம்பு படம் விரித்து ஆடிய தென்று நாங்கூழ்ப் பூச்சியும் தலைதூக்கி ஆடியதாம். 15995
பாம்பும் கீரியும் போல.
பாம்பும் கீரியும் போலப் பல காலம் வாழ்ந்தேன்.
பாம்பும் சாகவேண்டும்; கோலும் முறியக் கூடாது.
பாம்பும் சாகாமல் பாம்பு அடித்த கோலும் முறியாமல் இருக்க வேண்டும்.
- (பாம்பும் நோவாமல் கம்பு நோவாமல்.)
பாம்பும் தப்பாமல் கொம்பும் முறியாமல். 16000
- (ஒடியாமல்.)
பாம்பும் தன் பசியை நினைந்து தேரையும் தன் விதியை நினைந்த கதை.
பாம்பும் நோவாமல் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்க வேண்டும்.
பாம்பும் போச்சு; பாம்பு அடித்த கோலும் போச்சு.
பாம்பை அடித்தால் பால்வார்த்துப் புதைக்க வேண்டும்.
பாம்பைத் தின்று பாழ்மூலையில் இருக்கையில் வீம்புக்காய் என்னை வெளியில் இழுக்கிறீரா? 16005