171
சொல்லுதலுக்கு ‘மீதுரை’ என்று பெயராம். விடாது பேசுதலுக்குப் ‘பிதற்றுதல்’ என்று பெயராம்.
“மீதுரை பல்கால் விளம்புத லாகும்.”
“பிதற்றுதல் விடாது பேசுதலாகும்.”
ஒருவரிடம் உள்ள குறையைச் சுட்டி அவர் இல்லாத விடத்தில் புறங்கூறுதலுக்குக் ‘கொடுவாய்’ என்று பெயராம். ஒருவரிடம் இல்லாத குறையைக் கற்பனையாகப் புனைந்து அவர் இல்லாத விடத்தில் புறங்கூறுதலுக்குக் ‘கொண்டியம்’, ‘தொடுப்பு’ என்று பெயர்களாம்.
“கொடுவாய் என்பது புறங்கூற லாகும்.”
“கொண்டியம் தொடுப்பு வெறும்புறங் கூறல்.”
சிலரறிந்து பழித்தல், அம்பல் ஆகும் பலரறிந்து பழித்தல் அலர் எனப்படும்:
“அம்பல் சிலரறிந்து தம்முட் புறங்கூறல்.”
“அலரே பலரும் அறிந்து அலர்தூற்றல்.”
ஒருவரது வளர்ச்சியைக் கருதி, அவரது குறையைக் கண்டித்துப் பேசுவதைக் குறிக்கும் சொற்களாவன:—
“கழறலும் இடித்தலும் உறுதிக் கட்டுரை.”
குழந்தையின் பொருள் நிரம்பாத மெல்லிய மழலைப் பேச்சைக் குறிக்கும் பெயர்களாவன:—
“நிழற்றலும், மிழற்றலும், மென்செல்;
மழலை, கொஞ்சல், குதலை, உல்லாபம்,
மிழலை எனவும், விளம்பும் அதற்கே”
11