௧௩௦
முன்னுரை
கீழ்வரும் சொலவகங்களால் (ஸ்லோகங்களால்) காண்க: (வடமொழி கலந்த மொழிபெயர்ப்பு தமிழ்படுத்தப் பெறவில்லை)
'வேதத்தில் சொல்லப் பெற்றவைதாம் தர்மம்'
'வேதத்தில் மாறுபடச் சொல்லியிருந்தாலும் அது தர்மமே'
'வேதங்களே பஞ்ச பூதங்களைக் காக்கின்றன. வேதம் அநாதி வேத மந்திரங்களே ஹோமங்களுடன் சூரியனையடைந்து மழை பொழிவிக்கின்றன. அதனால் பருவமும் அதனால் உணவும் அதனால் மக்களும் உண்டாகிறார்கள்'
'சிரார்த்தம், யாகம், தானம் இவற்றிற்கு அடிப்படை வேதங்களே'
'வேதத்தை அறிந்தவனே (பிராமணன்) பாபத்தைப் போக்க வல்லவன்'
'வேதத்தை அறிந்தவன் (அஃதாவது பிராமணன்) எந்த ஆச்சாரிய (அஃதாவது பிரமசாரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்யாசம்) ஒழுக்கம்முள்ளவனாக இருந்தாலும் அவனே இம்மைக்கு இப்பிறவிக்கு அதிகாரி'
'வேதத்தை அறிந்தவனே (பிராமணனே) எல்லாரிலும் உயர்ந்தவன்'.
'வேதம், ஸ்மிருதிகள் (ஆரிய தர்ம நூல்கள்) இவற்றை மீமாம்ஸை நியாயத்தால் கேட்பவனே தர்மத்தை அறிபவன்'
'இதில் (அஃதாவது மனுதர்ம சாஸ்திரத்தில்) எல்லா தர்மமும் சொல்லப்படவில்லை. சொல்லப்பட்டவையும் கால, இட, வேறுபாட்டால் ஐயத்திற்குரியவையானால், அது தொடர்பாக, வேதமறிந்த பிராமணர்கள் எந்தத் தர்மத்தை ஏற்படுத்துவார்களோ அதுவே நிச்சயமான தர்மம்'