இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
உரு௭
மங்கலம் | அழகு, நன்மை | புணிணியம் |
மதலை | தூண் | குழந்தை |
தகுதி | பொருத்தம், | நடுவுநிலை தக்கமதிப்பு |
மல்லல் | வளம் | போராடுதல் |
மாடு | செல்வம் | பசுமாடு |
மாண்ட | சிறந்த,மாட்சிமை கொண்ட | இறந்துபோன |
மாற்றம் | மறுமொழி, விடை | வேறாதல் |
முதுவர் | அறிவுடையவர் | முதியவர், கிழவர் |
முறுவல் | பல் | புன்சிரிப்பு |
முத்தம் | முத்து | வாய்முத்தம் |
முனிதல் | வெறுத்தல் | சினத்தல், கோபப்படுதல் |
மேவார் | விரும்புவார் | பொருந்தாதவர் |
வாருதல் | சொரிதல் | வாரியெடுத்தல் |
வால் | வெண்மை, | விலங்கின் வால் |
வீறு | பெருமை,சிறப்பு | மிக்குணர்வு |
வெறி | நல்லமணம் | தீவிர ஆசை, தீவிர உணர்வு |
வேண்டுதல் | விரும்புதல் | கெஞ்சிக் கேட்டல் |
வேர்ப்பு | வெகுளல் | வெயர்வை |
வேளாண்மை | உதவி,ஈகை | உழவு |
வைகல் | நாள்தோறும் | நெருங்குதல் |
இவைபோலும் நூற்றுக்கணக்கான சொற்களுக்கு அன்றைய திருவள்ளுவர் காலப் பொருள்கள் காண்டது, அற்றைக் குமுகாயப் பழக்க வழக்கங்களையும், வாழ்வியல் நடைமுறைகளையும் அறிந்திருந்தால்தான் இயலும்.
இனி, இது போலவே அன்றைய வாழ்வியல், இனவியல், பொருளியல், அரசியல், பண்பியல், கலையியல், நாகரிகம் - முதலிய மக்களியல் கூறுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் உயர்த்துணர்தலும், நூல்வழியான,