168
அ-2-19 ஈகை 23
என்ப.
‘பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பின் பாரி’
- புறம்: 200:9-12
‘சிறுவி முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் எருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி’
- சிறுபாண்.:89-91
‘ஊருடன் இரவலர்க் கருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி'
- புறம் 201 : 2-5
'பறம்பு பாடின ரதுவே அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர்வரை யன்னே’
- புறம்:108 : 4-6
'ஆடினிர் பாடினிர் செவினே
நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே'
- புறம்:109:17-18
‘முந்நூ நூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றுாரும் பரிசிலர் பெற்றனர்’
- புறம்:110:3-4
‘முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத்து இசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் ஈத்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்’
- புறப்.வெ. 194
2. ஒரி:
இவன் வல்வில் ஓரி, ஆதன் ஒரி என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றான். கொல்லி மலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் இவன் தலைவன். வன்பரணர், கழைதின் யானையார் என்ற புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.
‘சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஒரி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . .. . . . .