58
தென்னைமரத் தீவினிலே...
மணிக்கு பொன்னம்பலம் புறப்படத் தயாரானார் பூஜை அறையிலிருந்த சுவாமி படங்களை எல்லாம் வணங்கி திருநீறு இட்டுக் கொண்டு, லட்சுமி அம்மாளிடமும், மனைவியிடமும் விடைபெற்றுக் கொண்டு பொன்னம்பலம் காரில் ஏறிக்கொண்டார். பரமகுருவும் மாமாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்.
கார் விமானநிலையத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. போகிற வழியில், "ஏஜண்ட் கூறிய அறுபது லட்சம் ரூபாய்க்கும் டிராவலர்ஸ் செக் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். அவள் கையில் மொத்தமாக பணத்தை கொடுத்து விட்டால் பேரம் முடிந்துவிடும்.” என்று. பரமகுருவிடம் மகிழ்ச்சியோடு கூறினார்.
உடனே பரமகுரு, "எல்லாம் முருகன் அருளால் நல்லபடியாகவே முடியும். அப்படியே பெரியம்மா ஞானாம்பாளையும்சென்று பார்த்துவிட்டு வாருங்கள். உடம்பு ரொம்ப சரியில்லை என்று போன மாதம் எனக்கு எழுதியிருந்தாள்," என்றார் பரமகுரு. பொன்னம்பலமும், "அப்படியே செய்கிறேன்!” என்றார்.