இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26
நல்ல தீர்ப்பு
கிள்ளை: நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின்,
- மக்களில் தன்னை உயர்ந்தவன் என்று கூறுகின்ற கொடியோன் செய்யும் கொடுமை செய்தவள் ஆவேன்.
- நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறு வேனாயின், உழுதவனைக் கூலிக்காரன் என்று கூறி உழுதவனைத்தான் பறிக்கும் முதலாளி செய்யும் தீமையைச் செய்தவள் ஆவேன்.
- நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின், தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழால் ஊழியம் பெற்றுத் தமிழையன்றி அயல் மொழியை ஆதரிக்கும் சழக்கன் செய்யும் சழக்குச் சூழ்ந்தவள் ஆவேன். நான் இந்த அறமன்றத்தின் முன் மெய்யே கூறுவதாக உறுதி கூறுகிறேன்.
அரசர் : கிள்ளாய் நீ அந்த மாணிக்கக் கணையாழியை எடுத்ததுண்டா?
கிள்ளை : நான் எடுத்ததில்லை பேரரசே!
அரசர் : அக்கணையாழி இப்போது உன்னிடமோ, உன்னால் பிறரிடமோ இல்லையா?
கிள்ளை : என்னிடம் இல்லை. நான் அதைப் பிறரிடம் கொடுத்து வைத்ததும் இல்லை பேரரசே!
அரசர் : சாலி இதுபற்றி உனக்கென்ன தெரியும்?
சாலி : கிள்ளை வைத்திருக்கக் கண்டேன்
அரசர் : என்றைக்கு?
சாலி : நேற்று
அரசர் : நேற்று அரண்மனைக்குப் போனதுண்டா?
சாலி : நானும் கிள்ளையும் போனதுண்டு.
அரசர் : என்ன வேலை?
சாலி : இளவரசி முல்லைக்கு நாங்கள் தோழிகள்.
அரசர் : இவை மெய்தானா கிள்ளாய்?