பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

207




இந் நாடகமானது சென்னையில் முதல் முறை 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி, மஹாசிவராத்திரி தினம் ஆடப்பட்டது. காயார் சி. தேசிகாசாரியார் ரத்னாங்கியாக மிகவும் நன்றாக நடித்தார். இவருக்காகவென்று கடைசியில் சாரங்கதரன் மடிந்ததும் அவன் உடல் மீது விழுந்து புலம்புவதாக ரத்னாங்கிக்கு வசனம் எழுதிக் கொடுத்தேன். இவருக்குச் சங்கீத ஞானம் கொஞ்சமுமில்லாதபடியால் ஒரு பாட்டும் பாடவில்லை; அப்படியிருந்தும் தன் வசனங்களை நன்றாய் நடித்து சபையோரையெல்லாம் மகிழ்வித்தார். கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவராயிருந்தும், ஸ்திரீ வேஷம் இவருக்கு மிகவும் பொருந்தியதாயிருந்தது. முக அபிநயத்தில் ஸ்திரீ வேஷம் தரிப்பதில் இவர் மிகவும் கெட்டிக்காரரென்றே சொல்ல வேண்டும். சோக பாகத்தில், தத்ரூபமாய் நடித்து, முதல் வகுப்பில் இவர் ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்று வந்து உட்கார்ந்திருந்த இவரது தந்தை தாயாரைக் கண்ணீர் விடும்படி செய்தார். இவ்வளவு நன்றாய் நடித்தும், ஏதோ காரணத்தினால் எங்கள் சபையில் பிறகு இவர் இரண்டொரு முறை தவிர ஸ்திரீ வேஷம் பூண்டதாக எனக்கு ஞாபகமில்லை. இது எங்கள் சபையின் குறையென்றே நான் கூற வேண்டும்.

துரைசாமி அய்யங்காரும் ராஜகணபதி முதலியாரும் வழக்கம்போல் நன்றாய் நடித்து, சபையோருக்கு விடா நகைப்பை விளைத்தனர்.

அ. கிருஷ்ணசாமி ஐயர் சித்ராங்கியாக மிகவும் விமரிசையாக நடித்தார். இவரது பாட்டுகள் சபையோரையெல்லாம் மிகவும் களிக்கச் செய்தன். சித்ராங்கியின் அறைக்குள் சாரங்கதரன் புகுந்தவுடன், சித்ராங்கியாக இவர் ‘வாரும்! வாரும்!’ என்கிற பல்லவியுடன் கூடிய பாட்டு ஒன்றைப் பாடியது சித்ராங்கியை வெறுக்க வேண்டிய சாரங்கதரனையும் சந்தோஷிக்கச் செய்தது என்றுதான் கூற வேண்டும். இவர் இள வயதில் சோக பாகங்களாடுவதில் இவருக்கு இணையில்லை யென்றே கூற வேண்டும். அப்பொழுது நல்ல வாலிபத்திலிருந் தமையால், குரலும் கம்பீரமாயும் இனிமையாயுமிருந்தது. இவர் சித்ராங்கியாகக் கடைசிக் காட்சிகளில் நடித்ததும், மிகவும் அற்புதமாயிருந்தது.

எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு சுமந்திரனாக நடித்தது ஒன்றும் தவறாக இல்லாவிட்டாலும், வந்திருந்தவர்